தமிழக அரசு: செய்தி
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! 12 மாநகராட்சிகளில் தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து
தமிழகத்தில் உள்ள 12 முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் தனியாருக்கு ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயக் கோரப்பட்டிருந்த டெண்டரைத் தமிழக அரசு தற்பொழுது ரத்து செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகிய தமிழக அரசு
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா அருகே 'தீபதூன்' என்ற இடத்தில் விளக்கேற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம்: வடபழனி -பூந்தமல்லி வழித்தடத்தை ஜூலையில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது: மாற்று இடத்தைத் தேடும் தமிழக அரசு
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த சென்னைக்கான இரண்டாவது புதிய பசுமை வழி விமான நிலைய திட்டத்தை முற்றிலும் கைவிடுவதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக கஜானா காலி, கடந்த ஆட்சியில் இருமடங்கான தமிழ்நாட்டின் கடன் சுமை: வெள்ளை அறிக்கையில் அம்பலம்
தமிழக அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்றில் மிக முக்கிய நகர்வாக, மாநிலத்தின் தற்போதைய நிதிநிலைமை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை ரூ.75,000 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவு
தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு முழுமையாகப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய 'யுவ புரஸ்கார் விருது' அறிவிப்பு
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரும், அரசியல்வாதியுமான வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும் உயரிய 'யுவ புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17 முதல் 6 - 8 ஆம் வகுப்புகளுக்குக் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் முக்கிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி! ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், மாநிலம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை நேரடியாகக் கொள்முதல் செய்து, அதனை முறைப்படி பதப்படுத்தி மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் உபபொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
தமிழகப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயம்! கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இனி சார்பதிவாளர் அலுவலகம் போக வேண்டாம்! ஆன்லைன் பத்திர பதிவு திட்டம்: முழு விபரங்கள் மற்றும் செயல்முறை விளக்கம்!
தமிழகப் பதிவுத்துறையில் நிலம் வாங்குபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களின் வசதிக்காக, சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே எங்கிருந்தும் ஆவணப் பதிவு செய்யும் "வருகை இல்லா ஆவணப் பதிவு" (Anywhere Registration) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை விசாரிக்க ஆளுநரின் அனுமதியைக் கோரிய தமிழ்நாடு அரசு!
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையைத் தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முயன்று வருகிறது.
முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று; என்ன எதிர்பார்க்கலாம்?
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசு கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் மிக முக்கியமான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
தமிழகம் முழுவதும் 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு; கட்டுக்கட்டாகச் சிக்கிய லஞ்சப் பணம்
தமிழ்நாட்டில் சுப முகூர்த்த நாள்களை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலவும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் பெரிய அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
EB அலுவலகத்தில் 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு; ₹297 கோடி ஊழல் ஆதாரங்களை அழிக்கச் சதியா?
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர்கள் தொடர்பான மிக முக்கிய ரகசிய ஆவணங்கள் அடங்கிய சுமார் 18 கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் தமிழக அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான தரமான உணவு வழங்கப்படும்: விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி!
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் சர்வதேச தரத்திலான ஊட்டச்சத்து உணவுகள் பிற விளையாட்டு வீரர்களுக்குக் கனவாக மட்டுமே நீடிக்கும் பாரபட்சத்தை உடைக்கும் அதிரடி அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் தொடங்க 21 நாள்களில் அனுமதி: ஒற்றைச்சாளர இணையதளம் மூலம் புதிய புரட்சி!
தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் (Ease of Doing Business), புதிய நிறுவனங்களுக்கான அனைத்து அரசு அனுமதிகளையும் அதிகபட்சமாக 21 நாட்களுக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி: குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து குறு விவசாயிகளுக்கும் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் இன்று (மே 25) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திமுக பிரமுகரின் ஒற்றை ட்வீட்.. அலறியடித்து டெண்டரை ரத்து செய்த தவெக அரசு
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தங்களின் முதல் முக்கிய அரசியல் சர்ச்சையைச் சந்தித்துள்ளது.
கோயில் ஊழியர்களுக்குத் தமிழக அரசின் சர்ப்ரைஸ் கிப்ட்! அகவிலைப்படி 60% ஆக உயர்வு!
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தொடர்ந்து, தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி (DA) 60 விழுக்காடாக உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அதிரடி சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விஜய் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிப்பு! செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு; முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களின் முழு லிஸ்ட்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் நியமனம்; யார் அவர்?
தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, மாநில அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக (Advocate General) மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
திமுகவின் 'ஆஃபர்' முதல் 'ரிசார்ட்' ரகசியங்கள் வரை: எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு: யார் ஆதரவு? யார் எதிர்ப்பு?
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
சூர்யா ரசிகர்களுக்கு ஜாக்பாட்: 'கருப்பு' படத்திற்கு 2 நாள் ஸ்பெஷல் ஷோவிற்கு அனுமதி
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கலைத்துறையினரின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
ஸ்டாலினுடன் கைகோர்க்க முயன்றாரா ஈபிஎஸ்? சி.வி.சண்முகம் உடைத்த பகீர் உண்மைகள்
தமிழக அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதிரடி காட்டும் முதல்வர் விஜய்! தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது முதல் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு; முதல்முறையாக நுழையும் முதலமைச்சர் விஜய்
தமிழகத்தின் முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது.
விஜய் பொறுப்பேற்றவுடன் முதல்வர் அலுவலகத்தில் நடந்த முக்கிய மாற்றங்கள்; முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம்
தமிழகத்தின் 13வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அலுவலகப் பணிகளைத் திறம்படக் கவனித்துக் கொள்ள இரண்டு முக்கிய அதிகாரிகளை நியமித்துள்ளார்.
500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடருமா? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், தனது முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்ட நிலையில், அதற்கான அரசாணையைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
நாளை கூடுகிறது தமிழக சட்டசபை! தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமனம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக தலைவர் விஜய், இன்று காலை 10 மணியளவில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
தவெக தலைவர் விஜயுடன் பதவியேற்கும் அமைச்சர்கள் இவர்கள்தான்; பட்டியல் வெளியானது
நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தமிழக முதல்வராக இன்று (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்கும் நிலையில், அவருடன் பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு அடுத்த நெருக்கடி: ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்!
முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில், சுமார் 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் புகாரைச் சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே கோர்ட்..புதிய முகம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார் பேரறிவாளன்
எந்த நீதிமன்றத்தில் தனது 31 கால விடுதலைக்காகவும், நீதிக்காகவும் சட்டப் போராட்டங்களை நடத்தினாரோ, அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று(ஏப்ரல் 27, 2026) பேரறிவாளன் வழக்கறிஞராக முறைப்படி பதிவு செய்து கொண்டார்.
கோடைகால வெப்ப அலையிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? தமிழக அரசு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத்தில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு முக்கியமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தயார் நிலையில் தமிழக தேர்தல் களம்! நான்கு முனைபோட்டியில் 4,023 வேட்பாளர்கள்!
தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பகிரங்கப் பிரச்சாரம், நாளை மாலையுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அடுத்த செக்! உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாற்றம்; புதிய செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தமிழக அரசு அதிகாரிகளின் மீது தனது பிடியை இறுக்கி வருகிறது.
மயிலாடுதுறை விவசாயி மகள் பரணிகா தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை!
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய விவசாயியின் மகள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் (National Athletics Championship) தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்குப் பிரசவ விடுப்பு: விதிகளில் அதிரடி திருத்தம்!
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பான அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடற்கரையில் திருமணம் செய்ய ஆசையா? நடுத்தர மக்களுக்காகவே தமிழக அரசின் 'பீச் வெட்டிங்' திட்டம்; கட்டணம் மற்றும் முன்பதிவு விவரங்கள்
தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், நடுத்தர மக்களின் "கடற்கரைத் திருமண" கனவை நனவாக்கவும் தமிழக அரசு ஒரு அதிரடித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஒரே மெசேஜ், ஓடோடி வரும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்: 108 சேவையில் அறிமுகமான வாட்ஸ்அப் வசதி
தமிழகத்தில் அவசர கால மருத்துவ தேவைகளுக்காக செயல்பட்டு வரும் '108' ஆம்புலன்ஸ் சேவையை, இனி வாட்ஸ்அப் மூலமாகவும் எளிதாக பெறலாம்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே தொடக்கம்?
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சின்னம்மை பரவலைத் தடுக்க முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது தமிழக அரசு; அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள்
சின்னம்மை என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய, மிக எளிதாகப் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும்.
குரூப் 2 தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! மெயின் தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5 வரை கடைசி வாய்ப்பு
தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (குரூப் 2 & 2A) தேர்வுகளை நடத்தி வருகிறது.
கிராமக் கோவில் பூசாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 11 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திடலில் இன்று (பிப்ரவரி 28, 2026) நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இனி லைசென்ஸ் வாங்குவது கொஞ்சம் சவால்தான்? தமிழகத்தில் 7 புதிய ஆட்டோமேட்டிக் டிரைவிங் டிராக்
மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம், தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து 7 புதிய கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத் தளங்களை (ADTT) அமைத்துள்ளது.
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்! மகளிர் உரிமைத் தொகையுடன் இனி ஒவ்வொரு வருஷமும் கோடைகால சிறப்புத் தொகை ரூ.2000
தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகால சிறப்புத் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
"இலவசங்கள் வரி செலுத்துவோர் தலையில் விழும் இடி!": தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி
தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் "பொறுப்பற்ற" இலவசத் திட்டங்கள் பொது நிதியை சீர்குலைப்பதாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இது குறித்து மாநில அரசுகளுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக பட்ஜெட் 2026: பெண்களுக்கு சொத்து பதிவில் 1% சலுகை! செமி கண்டக்டர் முதல் கப்பல் கட்டும் கொள்கை வரை
தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
தமிழக இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.
PHH, PHH-AAY ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு: பிப்ரவரி 25க்குள் இதை முடிக்காவிட்டால் சிக்கல்
தமிழகத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY) வைத்துள்ள அரிசி அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மிக முக்கியமான காலக்கெடுவை விதித்துள்ளன.
பெண்களுக்கு ரூ. 5,000 'மெகா' கிப்ட்! அதிரடியாக ரூ. 2,000-ஆக உயர்கிறது உரிமைத் தொகை
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கித் கணக்கில் இன்று காலை தலா ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"ஆஃப் பாயில் வேண்டவே வேண்டாம்!": பறவை காய்ச்சல் எதிரொலியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய எச்சரிக்கை
சென்னை அடையாறு பகுதியில் உயிரிழந்த காகங்களை ஆய்வு செய்ததில், அவற்றுக்கு 'H5N1' வகை பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்! தமிழக அரசின் சூப்பர் பயிற்சி: இப்போதே விண்ணப்பிக்கவும்
தமிழக இளைஞர்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது.
விதிகளில் அதிரடி தளர்வு! ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இனி ஆன்லைன் கட்டாயமில்லை! தமிழக அரசின் மூன்று முக்கிய மாற்றங்கள்!
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைவதற்கு தமிழ்நாடு அரசு அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.
100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை 'VB-G RAM G' என மாற்ற மத்திய அரசு அறிவித்திருந்தது.
தேர்தல் 2026: பிப்ரவரி 2-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே, அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலேயே நடத்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருமல் மருந்தில் 'எத்திலீன் கிளைக்கால்' நச்சு! 'ஆல்மண்ட் கிட்' மருந்துக்கு தமிழக அரசு தடை
பீகார் மாநிலத்தில் தயாரிக்கப்படும் 'Almond Kit' என்ற இருமல் மருந்தில், மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 'எத்திலீன் கிளைக்கால்' (Ethylene Glycol) எனும் நச்சு இரசாயனம் கலந்திருப்பது ஆய்வகச் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இனி வீட்டிலிருந்தே பத்திரம் பதியலாம்! தமிழக பதிவுத்துறையில் டிஜிட்டல் புரட்சி!
தமிழகத்தில் சொத்து விற்பனை மற்றும் பரிமாற்றங்களுக்கான பத்திர பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்க, 'எங்கும் எப்போதும்' என்ற புதிய ஆன்லைன் திட்டத்தை பதிவுத்துறை செயல்படுத்த உள்ளது.
மாடுபிடி வீரர்களுக்குக் கொண்டாட்டம்; இனி ஜல்லிக்கட்டில் வென்றால் அரசு வேலை; முதல்வர் ஸ்டாலினின் மாஸ் அறிவிப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்றது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கைரேகை பதியாவிட்டாலும் பொங்கல் பரிசு உண்டு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்: வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ்களைப் பெறலாம்; தமிழக அரசின் அதிரடித் திட்டம்
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, பொதுமக்கள் அரசுச் சேவைகளை மிக எளிதாக அணுகும் வகையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
பொங்கல் பரிசு ₹3000இல் முறைகேடா? பொருட்களைத் தர மறுக்கிறார்களா? உடனே இந்த எண்களுக்குப் புகார் கொடுங்கள்
தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளது.
பொங்கல் பரிசு விநியோகம் இன்று தொடக்கம்! டோக்கன் இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை போற்றும் வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் ஜனவரி 10-ல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்தக் கோரி, வரும் ஜனவரி 10-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உஷார்! இந்த ரேஷன் கார்டுகளுக்கு ₹3000 பொங்கல் பரிசு கிடையாது! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் கருப்பொருளின் கீழ் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 5) தொடங்கி வைக்கிறார்.
ஜனவரி 8 முதல் தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
பொங்கல் திருநாள் நெருங்கிவிட்ட வகையில், அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சல்: உருமாறிய கொரோனா வைரஸே காரணம்?
தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அதிகரித்து வரும் நீண்ட கால இருமல் மற்றும் காய்ச்சலுக்கு, உருமாறிய கொரோனா வைரஸ் மற்றும் 'H3N2' இன்ப்ளூயன்சா வைரஸ்களே முக்கிய காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்: 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு, பட்டாசு வெடிக்கத் தடை
2026-ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
தமிழக மின்சார வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி: 100% சாலை வரி விலக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வழங்கப்பட்டு வந்த 100 சதவீத சாலை வரி விலக்கு சலுகையை, 2027 டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 70 IPS அதிகாரிகள், 9 IAS அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், நிர்வாக வசதிக்காகவும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 9 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.